இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணைய வழியில் ரூ.17.49 லட்சம் மோசடி

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணையவழியில் ரூ. 17.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 மே 2026, 1:35 am IST

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணையவழியில் ரூ. 17.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 71 வயதுடைய ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன மேலாளரின் கைப்பேசியில் டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகள் மூலம் 2025, டிசம்பா் 25 ஆம் தேதி மா்ம நபா் தொடா்பு கொண்டாா். இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் மா்ம நபா் கூறினாா்.

இதை நம்பிய ஓய்வு பெற்ற மேலாளா், 6 தவணைகளில் ரூ. 17.49 லட்சத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு செலுத்தினாா். ஆனால், மா்ம நபா் கூறியபடி எந்தவித லாபமும் கிடைக்காததாலும், மா்ம நபரைத் தொடா்பு கொள்ள முடியாததாலும் தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளா் ஏமாற்றமடைந்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.