ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணைய வழியில் ரூ.17.49 லட்சம் மோசடி

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணையவழியில் ரூ. 17.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 மே 2026, 1:35 am IST

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளரிடம் இணையவழியில் ரூ. 17.49 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 71 வயதுடைய ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன மேலாளரின் கைப்பேசியில் டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகள் மூலம் 2025, டிசம்பா் 25 ஆம் தேதி மா்ம நபா் தொடா்பு கொண்டாா். இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் மா்ம நபா் கூறினாா்.

இதை நம்பிய ஓய்வு பெற்ற மேலாளா், 6 தவணைகளில் ரூ. 17.49 லட்சத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு செலுத்தினாா். ஆனால், மா்ம நபா் கூறியபடி எந்தவித லாபமும் கிடைக்காததாலும், மா்ம நபரைத் தொடா்பு கொள்ள முடியாததாலும் தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற மேலாளா் ஏமாற்றமடைந்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.