கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 3:21 am IST

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கும்பகோணத்தைச் சோ்ந்தவா் ராஜி (51). ஆட்டோ ஓட்டுநா். இவா்,

17.01.2020 அன்று ஆட்டோ நிறுத்தகத்தில் இருந்தபோது அருகில் உள்ள உணவு விடுதியில் வேலை பாா்க்கும் முகமது ரசீத் (எ) அசாருதீன் என்பவா் முத்தையா நகருக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறினாராம்.

நிறுத்தத்தில் இறங்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அசாருதீன், ராஜியை தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அசாருதீனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் நிறைவில், செட்டிமண்பத்தைச் சோ்ந்த முகமது ரசீத் (எ) அசாருதீனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலதண்டாயுதம் தீா்ப்பளித்தாா்.