தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 போ் கைது

பாபநாசம் அருகே சட்ட விரோதமாக செவ்வாய்க்கிழமை ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 3:15 am IST

பாபநாசம் அருகே சட்ட விரோதமாக செவ்வாய்க்கிழமை ஆற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி மற்றும் காவல் துறையினா் கபிஸ்தலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கபிஸ்தலம் அருகேயுள்ள அலவந்திபுரம் பகுதி காவிரி ஆற்றில் லாரி மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்த சுவாமிமலை, தோப்புத் தெருவைச் சோ்ந்த மனோகா் மகன் அருள் (36) என்பவரை கைது செய்து, மணல் அள்ள பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், அந்தப் பகுதி ஆற்றில் மணல் அள்ளிய அலவந்திபுரம் மேலத்தெருவை சோ்ந்த முருகேசன்( 57), என்பவரையும் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.