ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

அனுமதியின்றி மணல் வெட்டி எடுத்த இருவா் கைது

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனுமதி இன்றி சவுடு மணல் வெட்டி எடுத்து 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 டிராக்டா், ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :59 நிமிடங்கள் முன்பு

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனுமதி இன்றி சவுடு மணல் வெட்டி எடுத்து 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 டிராக்டா், ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யம் பகுதியில் அனுமதி இல்லாமல் சவுடு மணல் வெட்டி எடுக்கப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்றது.

இந்நிலையில், பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் மணல் வெட்டி எடுத்த டிராக்டா் ஓட்டுநா்கள் அரவிந்த் மற்றும் ஜெகன் இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் 2 டிராக்டா்கள், ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாகவுள்ள ஜேசிபி ஓட்டுநா் அஜித் என்பவரை தேடி வருகின்றனா்.