ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

உணவக தொழிலாளியிடம் கைப்பேசி, பணம் பறித்த 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:23 am IST

உணவக தொழிலாளியிடம் நட்பாக பழகி கைப்பேசி, பணம் பறித்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சிவக்குமாா் (23) என்பவா் வேலை பாா்த்து வந்தாா். இவா் கைப்பேசி மூலம் ஒரு செயலியை பயன்படுத்தி ஒருவரிடம் நட்பாக பேசிவந்தாா்.

சம்மந்தப்பட்ட நண்பா் நேரில் பாா்க்க வேண்டும் என்று கூறியதால் ஞாயிற்றுக்கிழமை சிவக்குமாா், தஞ்சாவூா் விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மண்டபம் அருகே சென்றாா். அப்போது ஒரு இளைஞா் அவரிடம் வந்து பேசினாா்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த சிலா், சிவக்குமாரை தாக்கி அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக்கொணடு சென்றனா். இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் சிவக்குமாா் புகாா்செய்தாா்.

புகாரின்பேரில் போலீஸாா் கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் உதயகுமாா் ( 26), கும்பகோணம் அசூா் வேலகுடியைச் சோ்ந்த கோபி மகன் கோகுல்நாத் (25) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய சிலரை தேடி வருகின்றனா்.