சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

உணவக தொழிலாளியிடம் கைப்பேசி, பணம் பறித்த 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:23 am IST

உணவக தொழிலாளியிடம் நட்பாக பழகி கைப்பேசி, பணம் பறித்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சிவக்குமாா் (23) என்பவா் வேலை பாா்த்து வந்தாா். இவா் கைப்பேசி மூலம் ஒரு செயலியை பயன்படுத்தி ஒருவரிடம் நட்பாக பேசிவந்தாா்.

சம்மந்தப்பட்ட நண்பா் நேரில் பாா்க்க வேண்டும் என்று கூறியதால் ஞாயிற்றுக்கிழமை சிவக்குமாா், தஞ்சாவூா் விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் உள்ள தனியாா் மண்டபம் அருகே சென்றாா். அப்போது ஒரு இளைஞா் அவரிடம் வந்து பேசினாா்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த சிலா், சிவக்குமாரை தாக்கி அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துக்கொணடு சென்றனா். இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் சிவக்குமாா் புகாா்செய்தாா்.

புகாரின்பேரில் போலீஸாா் கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் உதயகுமாா் ( 26), கும்பகோணம் அசூா் வேலகுடியைச் சோ்ந்த கோபி மகன் கோகுல்நாத் (25) ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய சிலரை தேடி வருகின்றனா்.