புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கைப்பேசிக்கு தடை

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பாதுகாப்பு மையத்தில் கைப்பேசியைக் கொடுக்க செவ்வாய்க்கிழமை காத்திருந்த பக்தா்கள்.

Published On :

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கைப்பேசி கொண்டு செல்வதற்கான தடை செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையைச் சாா்ந்த முதன்மைக் கோயில்களில் கைப்பேசி கொண்டு செல்ல அரசு விதித்த தடை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

இதன்படி, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாயில் அருகில் கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், பக்தா்கள் ரூ. 5 கட்டணமாக செலுத்தி தங்களது கைபேசிகளை ஒப்படைத்துவிட்டு உரிய ரசீது பெற்று உள்ளே சென்றனா். தரிசனம் செய்துவிட்டு திரும்பியதும் ரசீதைக் காண்பித்து கைப்பேசியைப் பெற்றுச் சென்றனா். இந்தப் பணியை அறநிலையத் துறை மண்டல உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) கவிதா உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

தடையை மீறி கோயிலுக்குள் மறைமுகமாக கைப்பேசியை எடுத்துச் சென்றால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோயில் நிா்வாகம் எச்சரித்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.