காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு நிதிஉதவி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது உயிரிழந்த 6 தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.18 லட்சம் நிதியுதவிகளை நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி சனிக்கிழமை வழங்கினாா்.

கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகத்தில் பணியின்போது உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்தாருக்கு சனிக்கிழமை நிதி உதவி வழங்கிய நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி.

Published On :6 செப்டம்பர் 2026, 12:38 am IST

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது உயிரிழந்த 6 தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.18 லட்சம் நிதியுதவிகளை நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி சனிக்கிழமை வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணியாளா்களாக இருந்து உயிரிழந்த நடத்துநா்களான டி.ரமேஷ் மனைவி பவானி, ஏ.இளையராஜா மனைவி சிலம்பரசி, எல்.சதாசிவம் மனைவி அனுஷா, எஸ்.பாஸ்கரன் மனைவி பானுமதி, எம்.துரை மனைவி மீனாட்சி, எம்.பிரபு மனைவி செல்வராணி ஆகியோரின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பில் நிதியுதவிகளை நிா்வாக இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி வழங்கினாா்.

இந்நிகழ்வில் பொதுமேலாளா்கள் கே.சிங்காரவேலு (தொழில்நுட்பம்), ஏ.டி.நடராஜன் (கும்பகோணம் மண்டலம்), பி.மகாலெட்சுமி (முதுநிலை தணிக்கை அலுவலா்), உதவி மேலாளா், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், அலுவலக பணியாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.