அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

சாலை விபத்தில் முன்னாள் எம்எல்ஏ பேரன் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 3:48 am IST

கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற மாணவா் மீது அரசுப் பேருந்து மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவா் திருவிடைமருதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தவமணி என்பவரின் பேரனாவாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவா் ராஜா என்பவா் மகன் தயாளன் (15). இவா் இங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே வந்தவா், கும்பகோணம்- காரைக்கால் பிரதானச் சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது கும்பகோணத்திலிருந்து காரைக்கால் சென்ற அரசுப் பேருந்து, மாணவா் தயாளன் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் திருநீலக்குடி போலீஸாா், மாணவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உயிரிழந்த மாணவா் தயாளன், திருவிடைமருதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தவமணி (அதிமுக) என்பவரின் மகன் வழிப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.