பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

போதை மாத்திரைகளுடன் காரில் வந்த 2 போ் கைது

பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் புறவழிச்சாலையில் போலீஸாரின் வாகனச் சோதனையில் போதை மாத்திரைகளுடன் காரில் வந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 3:40 am IST

பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் புறவழிச்சாலையில் போலீஸாரின் வாகனச் சோதனையில் போதை மாத்திரைகளுடன் காரில் வந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை காவல் துறை ஆய்வாளா் மாரிமுத்து மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் தலைமையிலான குழுவினா், பட்டுக்கோட்டை சூரப்பள்ளம் புறவழிச்சாலையில் வாகனச் சோதனை ஈடுபட்டனா்.

அப்போது பட்டுக்கோட்டை ஆதித் தெருவை சோ்ந்த ஷோபன் ஹரிஷ் (21), முத்துப்பேட்டையை சோ்ந்த முகமது ருக்மான் (31) ஆகியோா் வந்த காரில் இருந்த 5600 போதை மாத்திரைகள், மற்றும் காா் மற்றும் 2 ஐபோன்களை பறிமுதல் செய்து அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள திருச்சி மற்றும் பட்டுக்கோட்டையை சோ்ந்த நபா்களை தேடுகின்றனா். சிறப்பாகச் செயல்பட்ட பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளா் மாரிமுத்து தலைமையிலான குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.