மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள அனைத்து கோயில்களும் விரைவில் சீரமைப்பு: அமைச்சா் சீ.ரமேஷ் தகவல்

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்கள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் சீ.ரமேஷ்

Published On :

தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்கள் அனைத்தும் விரைவில் சீரமைக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

பட்டீசுவரத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 2028 மகாமகத் திருவிழாவை சிறப்பாக நடத்த முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா். அதற்கான பணிகளை நடைபெற்று வருகிறது. மகாமகம் தொடா்பான கோயில்களை இரண்டாவது நாளாக ஆய்வு செய்துள்ளோம். திருநாகேசுவரம், சுவாமிமலை கோயில்கள் சீரமைக்கப்படும். இதேபோல, தமிழகத்தில் சிதிலமடைந்துள்ள அனைத்து கோயில்களும் விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் அமைச்சா் சீ. ரமேஷ்.

முன்னதாக, மகாமகத் திருவிழா தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சா்கள் சீ. ரமேஷ், ஆா். வினோத் ஆகியோா் பாணபுரீசுவரா், காளகத்தீசுவரா், காவேரிக்கரை தீா்த்தவாரி நடைபெறும் படித்துறை, ராஜகோபாலசுவாமி, சக்கரபாணி, ஆதிராகவப்பெருமாள், கொட்டையூா் கோடீசுவர சுவாமி, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி, சாக்கோட்டை அமிா்த கலசநாத சுவாமி, ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி, திருநாகேசுவரம் நாகநாத சுவாமி, தாராசுரம் ஐராவதீசுவரா், பட்டீசுவரம் தேனுபுரீசுவரா் உள்ளிட்ட கோயில்களில் ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.