சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

"திருப்பதிக்கு விரைவில் சுற்றுலாப் பேருந்து'

திருச்சியிலிருந்து, திருப்பதி உள்ளிட்ட  இடங்களுக்கு விரைவில் சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.

Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:15 am IST

திருச்சியிலிருந்து, திருப்பதி உள்ளிட்ட  இடங்களுக்கு விரைவில் சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்.
திருச்சியில்  மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 84 லட்சத்தில் மாநகர் முழுவதும் 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அவர் மேலும் கூறியது: 
தமிழகம் சுற்றுலாத் துறையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து கோயில் தரிசனம், தங்குமிடம் உள்ளிட்டவற்றுடன் குறைந்த கட்டணத்தில் 
தினசரி 150 பேர் சென்று வரும் வகையில் சுற்றுலாப் பேருந்துகள் இயக்கப்படுவதைப் போல, திருச்சியிலிருந்தும் விரைவில் இயக்கப்பட உள்ளது. முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வர சாலைகள்  மேம்படுத்தப்படும் என்றார். அமைச்சர் எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, காவல் ஆணையர் அ. அமல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.