யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும்: வங்கி அதிகாரிகள் மாநாட்டில் கோரிக்கை

பதினோராவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய

News image
Updated On :9 ஜூலை 2018, 2:47 am

DIN

பதினோராவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க 8 ஆவது மாநில மாநாட்டில் கோரிக்கை விடுத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு சங்கத் தலைவர் கே.  பாஸ்கரன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் எஸ். நாகராஜன்,   தமிழ்நாடு பொதுச் செயலர் டி.எஸ். கணேசன்,  திருச்சி மாவட்டத் தலைவர் ஆர்.டி. ராமமூர்த்தி,  ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலர் வேலாயுதம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் அருணாச்சலம்,  திருச்சி மாவட்ட வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் நீலகண்டசர்மா,  திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலர் ராமராஜ், இந்திய வங்கியின் திருச்சி மண்டல மேலாளர் வி. சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொதுத்துறை வங்கிகளில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதிகாரிகளின் பணி நேரம் வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். பதினோராவது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும்.  பொதுத்துறை வங்கிகள் மற்றும் தொழிலாளர் நலச்சட்டங்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.