வாலிபால் : சூப்பர் லீக்கில் விளையாட 4 கல்லூரிகள் தகுதி

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான வாலிபால் போட்டியின்  சூப்பர் லீக்கில் விளையாட 4 கல்லூரிகள் தகுதி பெற்றுள்ளன.
Updated on
1 min read

திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான வாலிபால் போட்டியின்  சூப்பர் லீக்கில் விளையாட 4 கல்லூரிகள் தகுதி பெற்றுள்ளன.
பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் நடத்தப்படும் பொன்விழா ஆண்டு ஜி.எச். லாண்டர் கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. 12 கல்லூரிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதன்கிழமை நடைபெற்ற போட்டியில், திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை 25-21, 16-25, 25-17 என்ற புள்ளிக்கணக்கில் திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரியும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியை 25-16, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியும் வென்றது.
திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை 25-14, 25-19 என்ற புள்ளிக்கணக்கில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை 25-12, 25-9 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை லயோலா கல்லூரியும்,  மற்றொரு போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை 25-17, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி வென்றது.
லீக் போட்டிகளில் 4 பிரிவுகளில் முதலிடம் பிடித்த திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி,  சென்னை லயோலா, டி.ஜி. வைஷ்ணவ கல்லூரிகள், கோவை  ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com