அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் அருந்தியர் சமூகத்தைச் சேர்ந்தவரை அவமதித்த வன்கொடுமையைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :21 மே 2018, 9:00 pm

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் அருந்தியர் சமூகத்தைச் சேர்ந்தவரை அவமதித்த வன்கொடுமையைக் கண்டித்து ஆதித்தமிழர் பேரவையினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிறுகனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ், அதே கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல்- வாங்கல் பிரச்னை இருந்து வந்ததாகவும், இதுதொடர்பாக முத்துவுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செயல்பட்டதாகவும், கடந்த மாதம் 28 ஆம் தேதி சிறுகனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடைபெற்ற பிரச்னையின் போது, துரைராஜை அவமதித்து வன்கொடுமையில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட
புகாரின் பேரில் சிறுகனூர் போலீஸார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
இதை கண்டித்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் வடக்கு மாவட்டச் செயலர் மண்ணை இரா. இளங்கோ தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் ஆதிசக்தி முன்னிலை வகித்தார்.
ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலர் ஆ. நாகராசன் கண்டன உரையாற்றினார். மாநிலத் துணைப் பொதுச் செயலர் செங்கை குயிலி, பழநி.சிவா, மாநிலப் பொறியாளர் அணிச் செயலர் எழில்புத்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.