ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சுயமரியாதை என்ற பெயரில் பெரியாரை சிறு வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது

சுயமரியாதை என்ற பெயரில் பெரியாரை சிறு வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது என்றார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி.

Updated On :8 அக்டோபர் 2018, 8:57 am IST

சுயமரியாதை என்ற பெயரில் பெரியாரை சிறு வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது என்றார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் சுமார் 2 கோடி தேவேந்திர குல மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் விருப்பம் பட்டியல் இனத்தில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தான். இதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். 
தற்போதுள்ள நிலையில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் இடைத்தேர்தலை சந்திக்க விரும்பவில்லை என்றுதான் கூறமுடியும். அதே நேரம்  இடைத்தேர்தல் தள்ளி போவதற்கான காரணத்தை ஏற்க முடியாது. நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் வாக்குகளுக்காக மட்டுமே எதிர்க்கின்றனர். 
வரும் மக்களவைத் தேர்தலில் தேவேந்திர குல வேளாளர்களின் அடையாளத்தை மீண்டும் எடுக்கும் அமைப்புகளுடன் கூட்டணி அமைப்போம். தமிழகத்தின் கல்வியின் தரம் மிகத் தாழ்ந்து போவதற்கு துணைவேந்தர் நியமன முறைகேடு முக்கிய காரணமாகும். அதேவேளையில், தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரம் சிறப்பாக உள்ளது.      
சுயமரியாதையின் தந்தை பெரியார் எனக்கூறி அவரை தமிழ்நாட்டு அளவில் பார்க்காதீர்கள். லெனின், காரல் மார்க்ஸ் உள்ளிட்டோர் சுயமரியாதைக்கான போராட்டங்களை உலகளவில் நடத்தினர். எனவே, சுயமரியாதை என்ற பெயரில் பெரியாரை சிறு வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது என்றார் க.கிருஷ்ணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.