மரக்கன்றுகள் நடுவது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றார் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்.
திருச்சி மாநகரைப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ், மாநகராட்சியின் நான்கு கோட்டங்களுக்குள்பட்ட சாலையோரங்களில் ஞாயிற்றுக்கிழமை 2,700 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாநகரைப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி ஜூன் 5 ஆம் தேதி தொடங்கி, குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மூலமாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடிவாகி, அதன்படி நடப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ- அபிஷேகபுரம் கோட்டத்துக்குள்பட்ட பகுதி சாலையோரங்களிலும், வீடுகளிலும் மரக்கன்று நடும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சியின் 29 ஆவது வார்டு ரயில் நகர்ப் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் முன்னிலையில், குடியிருப்புச் சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் மரக்கன்று நட்டனர். தொடர்ந்து 150 வீடுகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியது: மாநகரைத் தூய்மையாக வைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது போன்ற திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகின்றன.
காய்கறி, உணவுக் கழிவுகளை வீட்டிலேயே உரமாக்கும் வகையில் குடியிருப்புதாரர்களை ஊக்குவிக்கும் வகையில், வாரத்தில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. நமது ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பது சுற்றுச்சூழல்தான். எனவே ஒவ்வொருவரும் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகள் நடும் திட்டம் பொதுமக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றார் ஆணையர்.
உதவி ஆணையர்கள் பிரபாகரன், தயாநிதி, ஷேக் அய்யூப், துரைமுருகன் ஆகியோர் தத்தம் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கினர். ஏராளமான மக்கள் மரக்கன்று நட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாட்டை சிதறடிக்கும்: மம்தா பானா்ஜி எச்சரிக்கை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

மியான்மா்: ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு; முன்னாள் அதிபா் விடுவிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

