பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

முதல்வர் கோப்பைக்கான மாநில தடகள போட்டி தொடக்கம்

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:55 am IST

முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டிகள் நடத்தப்படுகின்றன.  2018-19ஆம் ஆண்டுக்கான போட்டிகள் மாவட்ட அளவில் முடிந்து, தேர்ச்சி பெற்ற 320 வீரர்கள் மற்றும் 320 வீராங்கனைகள் மாநில போட்டிக்கு அழைக்கப்பட்டனர். திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்து ஆட்சியர் சு. சிவராசு பேசுகையில், 
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். மேலும், முதல் 3 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.
இதனைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். இப்போட்டிகளில் 32 மாவட்டங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். திங்ள்கிழமையும் போட்டிகள் நடைபெறும். மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தொடக்க விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பிரபு, மண்டல முதுநிலை மேலாளர் பிராங்பால் ஜெயசீலன், விளையாட்டு விடுதி மேலாளர் ஆர். ரமேஷ் மற்றும் பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.