ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

காருக்கு பாதுகாப்பாக மனைவியை தவிக்கவிட்டுச் சென்ற மதபோதகர்

பெங்களூரு மதபோதகர் தனது காருக்கு பாதுகாப்பாக  மனைவியை ஒரு நாள் முழுவதும் திருச்சி

Updated On :25 பிப்ரவரி 2019, 8:58 am IST

பெங்களூரு மதபோதகர் தனது காருக்கு பாதுகாப்பாக  மனைவியை ஒரு நாள் முழுவதும் திருச்சி விமானநிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமானநிலையத்தில் 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் கார் நிறுத்துமிடம்,  பூங்கா பகுதிகளில் வெடிகுண்டு பிரிவினர் சோதனை செய்வது வழக்கம்.  சனிக்கிழமை இரவு  முக்கிய விருந்தினர்களின் கார் நிறுத்தும் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் நிற்பதை கண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்,  அருகில் சென்று பார்த்த போது கதவுகள் மூடப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவர் உள்ளே படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  காரின் கண்ணாடியை தட்டி  மூதாட்டியை  எழுப்பி  அவரிடம் விசாரித்துபோது, பெயர் மரியம்மகிழ்ச்சி எனவும், பெங்களூருவில் இருந்து திருச்சி வழியாக மதபோதகரான தனது கணவர் வின்சென்ட்  மற்றும் குடும்பத்தினருடன் கன்னியாகுமரி செல்லும் போது, அவசர அழைப்பின் காரணமாக திருச்சியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்றனர். 
அப்போது  காருக்கு பாதுகாப்பிற்காக தன்னை விமானநிலையத்திலேயே விட்டு சென்றதால் காத்திருப்பதாக கூறியுள்ளார்.     இதை தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் காரை எடுத்து செல்ல முடியாத அளவிற்கு இரும்புச் சங்கிலியால் பூட்டினர். ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூருவில் இருந்து திருச்சி விமானநிலையம் வந்த வின்சென்ட் தனது கார் பூட்டப்பட்டிருப்பதை கண்டு மனைவியிடம் கேட்ட போது நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதையடுத்து,  மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், வின்சென்ட்டை  எச்சரிக்கை செய்து எழுதி வாங்கிக் கொண்டு காரை எடுத்து செல்ல அனுமதித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.