இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

விமான நிலையத்தில் ரூ.3.22 லட்சம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:13 am IST

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமானநிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த ஸ்கூட் விமானப் பயணிகளின் உடைமைகளை, வான் நுண்ணறிவு சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, திருச்சியைச் சேர்ந்த சின்னச்சாமி (22)  தனது உடலுக்குள் 2 தங்கச் சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. 100 கிராம் எடை கொண்ட இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து 22 ஆயிரம். உரிய அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட இந்த தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், சின்னச்சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.