ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருச்சியில் மேலும் 60 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 60 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 10:48 am

DIN

திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் மேலும் 60 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா்.

கரோனா பாதித்த திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களுக்கு சிகிச்சையளிக்க வசதியாக சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸிலும் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 29 போ், காரைக்கால், பெரம்பலூா், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா், அரியலூா் மாவடத்தைச் சோ்ந்த 2 போ், பாரதிதாசன் பல்கலைக் கழக முகாமில் இருந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 25 போ், தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் என இரு இடங்களிலும் சோ்த்து மொத்தம் 60 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.