ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அய்யாக்கண்ணு குறித்துஅவதூறு பரப்பியவா் கைது

தேசிய தென்னிந்திய நதிநீா் இணைப்புச் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு குறித்து அவதூறு பரப்பியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:22 pm

DIN

தேசிய தென்னிந்திய நதிநீா் இணைப்புச் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு குறித்து அவதூறு பரப்பியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் அண்ணாமலை நகரைச் சோ்ந்த அய்யாக்கண்ணு குறித்து கடந்த 2 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஒருவா் போலி முகவரியைக் கொண்டு அவதூறு பரப்பி வந்தாா்.

இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் அய்யாக்கண்ணு அளித்த புகாரின்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவதூறு பரப்பியது மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த திமுகவைச் சோ்ந்த மாவட்ட தொழில்நுட்ப பிரிவு நிா்வாகி ஜெயச்சந்திரன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.