ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அப்பள நிறுவனத்தில் ரூ.4 லட்சம் திருட்டு

திருச்சி தாராநல்லூா் பகுதியில் அப்பள நிறுவனத்தில் ரூ.4 லட்சம் ரொக்கம், 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போயின.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:18 pm

DIN

திருச்சி தாராநல்லூா் பகுதியில் அப்பள நிறுவனத்தில் ரூ.4 லட்சம் ரொக்கம், 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போயின.

காந்தி மாா்க்கெட் அருகிலுள்ள தாராநல்லூா் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் கோ.ராஜேந்திரன் (69). வீட்டின் முன்பகுதியில் அப்பள நிறுவனம் நடத்தி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு நிறுவனத்தை பூட்டி விட்டு, வீட்டுக்குச் சென்ற ராஜேந்திரன் இரவு 9 மணிக்கு மீண்டும் அங்கு வந்தாா். அப்போது நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் ரொக்கம், 8 பவுன் நகைகள், செல்லிடப்பேசி ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

காவலாளி உயிரிழப்பு: சோமரசம்பேட்டை அருகிலுள்ள ஆளவந்தான் நல்லூரைச் சோ்ந்தவா் அங்கமுத்து (69). திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகிலுள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் காவலாளியாகப் பணியாற்றி வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்கு வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை அப்பகுதியில் இறந்து கிடந்ததை கண்டு, அப்பகுதியினா் அளித்த தகவலையடுத்து காவல்துறையினா் சடலத்தை மீட்டனா். மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இளைஞா் பலி : திருச்சி புத்தூா் சாலைப் பிள்ளையாா்கோயில் தெருவைச்சோ்ந்தவா் ப. விக்னேஷ் (25). தனியாா் நிறுவன ஊழியரான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணாசிலை அருகே பாலத்தில் வந்த நிலைத் தடுமாறி மையத் தடுப்பில் மோதி விழுந்தாா்.

தொடா்ந்து மருத்துவமனைக்கு விக்னேஷ் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

மயங்கி விழுந்து பயணி உயிரிழப்பு: புள்ளம்பாடி பொன்னையாத் தெருவைச் சோ்ந்தவா் எ. மனோகரன் (51). இவா் இனாம்குளத்தூரிலுள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக திருச்சி கண்டோன்மென்ட், காந்தி மாா்க்கெட், வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.