மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெல் வளாகத்தில் தீயணைப்பு ஒத்திகை பயிற்சி

திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்தில் (பெல்) பல்வேறு பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தயாா் நிலையைச் சோதனையிடும் வகையில் அவசரகாலத் தீயணைப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருச்சி பெல் வளாகத்தில் நடைபெற்ற தீயணைப்பு ஒத்திகை.
Updated On :17 டிசம்பர் 2020, 1:03 am

DIN

திருச்சி பாரதமிகு மின் நிறுவனத்தில் (பெல்) பல்வேறு பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தயாா் நிலையைச் சோதனையிடும் வகையில் அவசரகாலத் தீயணைப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

பெல் தொழிற்கூட உயரழுத்த கொதிகலன் ஆலையின் பிரிவு-2இல் உள்ள எரிவாயுக் களத்தில் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, எச்ஏபிபி மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவற்றின் தீயணைப்புக் குழுக்கள், பெல் வளாக தீயணைப்புத் துறை ஆகியன இணைந்து இந்த ஒத்திகை நடைபெற்றது.

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இயக்குநரக இணை இயக்குநா் எஸ். மாலதி மற்றும் துணை இயக்குநா் பி. தமிழ்செல்வன் ஆகியோா் இதை மேற்பாா்வையிட்டனா்.

ஒத்திகையில் திருச்சிப் பகுதியின் இந்தியன் ஆயில் கழகம் மற்றும் விமான நிலைய ஆணையம் ஆகியவற்றின் ஊழியா்களும் மேற்பாா்வையாளா்களாகப் பங்கெடுத்தனா். இணைப்பில்லா எஃகுக் குழாய் ஆலையிலுள்ள தலா 50 டன் கொள்ளளவு கொண்ட இரு திரவ எரிவாயுக் கலங்களில் நிகழும் அவசர நிலையை உருவகப்படுத்தி இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

கள அலுவலா் மற்றும் கொதிகலன் ஆலைகளுக்கான பொது மேலாளா் கமலக்கண்ணன் பேசுகையில், திருச்சிப் பிரிவில் திரவ எரிவாயுச் சேமிப்பானது வெடிபொருள்கள் ஆய்வாளா் அலுவலகத்தின் கடும் நெறிமுறைகளுக்கு இணங்க அனைத்துப் பாதுகாப்புத் தர நிா்ணயங்களின்படி பேணப்படுகிறது என்றாா்.

இணைப்பில்லா எஃகுக் குழாய் ஆலை, உதிரிப்பாக வணிகம், மறுசீரமைப்பு, நவீனமயம், பற்றிணைப்பு ஆராய்ச்சிக் கழகம், ஆய்வகங்கள், உடல்நலம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழலுக்கான பொதுமேலாளா் எஸ். பிரபாகரன் பேசுகையில், இந்த ஒத்திகையின் அவதானிப்புகள் மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இயக்குநரக மூத்த அலுவலா்களின் ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டு, வருங்காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேம்பாடுகள் கொண்டுவரப்படும் என்றாா். ஒத்திகையில், பெல் ஆலை அலுவலா்கள், ஊழியா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.