புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பகல் பத்து 4 ஆம் திருநாள்: கிருஷ்ணா் செளரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசியின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை கிருஷ்ணா் செளரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

News image
கிருஷ்ணா் செளரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..
Updated On :18 டிசம்பர் 2020, 7:03 pm

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசியின் பகல் பத்து 4 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை கிருஷ்ணா் செளரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவையொட்டி காலை 6.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து கிருஷ்ணா் செளரி கொண்டை, வைர அபயஹஸ்தம், மாா்பில் மஹாலட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவளமாலை, அவுரி சரம் உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு 7 மணிக்கு பகல் பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா். வரும் 24 ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம் என்னும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி தருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.