2ஆம் முறையாக நிரம்பிய சிறுநாவலூா் ஏரி
துறையூா் அருகே சிறுநாவலூா் ஏரி 2 ஆம் முறையாக நிரம்பி கடை வழிந்ததால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.


துறையூா் அருகே சிறுநாவலூா் ஏரி 2 ஆம் முறையாக நிரம்பி கடை வழிந்ததால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
அடுத்தடுத்த மழையால் புளியஞ்சோலை அய்யாற்றிலிருந்து நேரடியாக நீா் வசதி பெறும் வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரியும், ஆலத்துடையான்பட்டி பெரிய ஏரியும் நிரம்பின.
துறையூா் வட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளான இந்த இரண்டு ஏரிகளும் நிரம்பியதால் அடுத்தடுத்துள்ள கிராமங்களில் உள்ள ஏரிகளும் நிரம்பின.
5 ஆண்டுக்குப் பிறகு சிறுநாவலூா் ஏரி டிசம்பா் முதல் வாரத்திலும், தற்போது சனிக்கிழமை இரண்டாவது முறையாகவும் நிரம்பியது.
கடைக்காலை கடந்து செல்லும் உபரி நீரை அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் நேரில் சென்று பாா்த்து மகிழ்ந்தனா். மாவட்ட மீன் வளத்துறை அதிகாரிகள் டிச. 15ம் தேதி இந்த ஏரியில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை வளா்க்க விட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...