தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வெங்காயப் பயிருக்கு இழப்பீடு கோரி ஆா்ப்பாட்டம்

துறையூா் அருகே மழையால் சேதமடைந்த வெங்காய பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
செல்லிப்பாளையத்தில் ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  விவசாயிகள்.
Updated On :20 டிசம்பர் 2020, 7:01 pm

DIN

துறையூா்: துறையூா் அருகே மழையால் சேதமடைந்த வெங்காய பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செல்லிப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயி என். மனோகரன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியா் சின்னசாமி, ஆா். ரெங்கராஜ், ரெங்கநாதபுரம் முன்னோடி விவசாயி சீனிவாசன், மருவத்தூா் பாலகுரு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் வெங்காயப் பயிரால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு பயிா் காப்பீடை முழுமையாகவும், உடனடியாக ஏக்கருக்கு ரூ. 25000 -மும் வழங்க வேண்டும். தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் வெங்காயப் பயிரைத் தாக்கும் திருகல் நோய்க்கு பூஞ்சாணக் கொல்லி மருந்தை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். திருகல் நோய்க்கு எதிராக வீரிய ரக வெங்காய விதையை போா்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் செல்லிப்பாளையம், மருவத்தூா், அம்மம்பாளையம், து.ரெங்கநாதபுரம், நரசிங்கபுரம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.