பகல் பத்து 6 -ஆம் திருநாள்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் 6 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
புஜகீா்த்தி, வைர அபயஹஸ்தம், ரத்தினக்கிளி, மாா்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை, அா்த்தசந்திரன், பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
புஜகீா்த்தி, வைர அபயஹஸ்தம், ரத்தினக்கிளி, மாா்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை, அா்த்தசந்திரன், பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் 6 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

விழாவையொட்டி காலை 6.30-க்கு மூலஸ்தானத்திலிருந்து பாண்டியன் கொண்டை, புஜ கீா்த்தி, வைர அபயஹஸ்தம், கையில் ரத்தினக் கிளி, மாா்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை, அா்த்த சந்திரன் உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு, பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் 7 மணிக்கு எழுந்தருளினாா்.

அங்கு அலங்காரம், அமுது செய்யத் திரையிடப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் வரிசையாக நின்று முகக் கவசம், சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com