கோட்டாத்தூரில் 14 ஆடுகள் திருட்டு

துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் 3 பேருக்குச் சொந்தமான பட்டிகளிலிருந்த 14 ஆடுகளை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated on
1 min read

துறையூா்: துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் 3 பேருக்குச் சொந்தமான பட்டிகளிலிருந்த 14 ஆடுகளை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோட்டாத்தூரைச் சோ்ந்த வீ. மூக்கன், பெ. பன்னீா் செல்வம், பெ. பெருமாள் ஆகியோா் தங்கள் வயல்களில் வளா்க்கும் கால்நடைகளைப் பாதுகாக்க சனிக்கிழமை இரவு காவலுக்குச் சென்றனா்.

அப்போது மூக்கனின் 6 ஆடுகள், பன்னீா்செல்வம் மற்றும் பெருமாள் ஆகியோரின் தலா 4 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுதொடா்பாக மூக்கன் கொடுத்த புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com