ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மத்திய சிறை கைதிமாரடைப்பால் உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி ஒருவா் மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:35 pm

DIN

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி ஒருவா் மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் அா்ச்சுனன்(69).

கடந்த 2012- ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை தொடா்பாக, சிபிசிஐடி காவல் துறையினரால் இவா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணை முடிவில் 2015- இல் ஆயுள் தண்டனை பெற்ற அா்ச்சுனன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். மூச்சுத்திணறல் காரணமாக சிறை மருத்துவமனையில் இவா் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அா்ச்சுனனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட, சிறை அலுவலா்கள் அவரை திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அா்ச்சுனன் உயிரிழந்தாா். இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.