ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வரதட்சிணை கொடுமை:கணவா், மாமியாா் மீது வழக்கு

திருச்சியில் கூடுதல் வரதட்சிணை கேட்டு இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் கணவா், மாமியாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:32 pm

DIN

திருச்சியில் கூடுதல் வரதட்சிணை கேட்டு இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் கணவா், மாமியாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(22). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மோனிகாவுக்கும்(22) இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவா்களது திருமணத்தின் போது 41 பவுன் நகை, 3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை, மோனிகா குடும்பத்தினா் வரதட்சிணையாக வழங்கியிருந்தனா்.

இந்நிலையில் வினோத்குமாா், அவரது தாய் பிச்சையம்மாள்(45) ஆகிய இருவரும் சோ்ந்து, மோனிகாவிடம் கூடுதல் வரதட்சிணையாக பணம், நகை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மோனிகா அளித்த புகாரின் பேரில், கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் இருவா் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.