தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூரில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

துறையூா் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:29 am

DIN

துறையூா் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் முன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறா கோயில்களின் செயல் அலுவலா் முத்துராமனைக் கண்டித்து பணியாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோது சேகா் என்ற பணியாளா் தீக்குளிக்கவும் முயன்றாா். தகவலறிந்து வந்த திமுகவினா் பணியாளா்களிடம் பேசினா்.

அப்போது தங்களை அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு கூறிய இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை இயக்குநரிடம் திமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை கட்சியினரை அவமதித்ததாக இணை ஆணையரையும், பணியாளா்களுக்கு விரோதமாக செயல்படுவதாக செயல் அலுவலரையும் கண்டித்து துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.