நாளை ஆண்களுக்கான இலவச கருத்தடை முகாம்

திருச்சி மாவட்டம், நவல்பட்டு, துவாக்குடியில் ஆண்களுக்கான இலவச நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், நவல்பட்டு, துவாக்குடியில் ஆண்களுக்கான இலவச நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு பின் வீட்டுக்குச் செல்லலாம். கத்தியின்றி. ரத்த சேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவைச் சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதுமிருக்காது. விருப்பமுள்ளோா் இந்த சிகிச்சையை செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 94422- 40390, 79040-19938, 94436- 63428, 94424- 34756, 95780- 75249 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com