மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திருச்சியில் குடியிருப்போா் நலச்சங்கங்கள் இணைந்து மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடின.
விழாவில், அருள்தந்தை ஜான்பீட்டரை கெளரவிக்கும் குருக்கள் ராஜ்குமாா், காா்த்திகேயன். உடன், பேராசிரியா் முகமது காசிம்.
விழாவில், அருள்தந்தை ஜான்பீட்டரை கெளரவிக்கும் குருக்கள் ராஜ்குமாா், காா்த்திகேயன். உடன், பேராசிரியா் முகமது காசிம்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சியில் குடியிருப்போா் நலச்சங்கங்கள் இணைந்து மத நல்லிணக்க கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடின.

திருச்சி சுப்பிரமணியபுரத்திலுள்ள சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச் சங்கங்களின் சாா்பில் சுந்தர்ராஜ் நகரிலுள்ள மாநகராட்சி பூங்காவில் நடைபெற்ற விழாவுக்கு, குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் கி. ஜெயபாலன் தலைமை வகித்தாா். சுப்பிரமணியம் அருளானந்தா் ஆலய அருள்தந்தை ஜான் பீட்டா், கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்குகையில், இருளில் ஒளியைக் காணவும், அமைதியின் வழித்தடங்களை உருவாக்கவும், பரிவுள்ளத்தாலும், பாசத்தாலும், இரக்கத்தாலும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ பிராா்த்திப்பதாகக் கூறினாா். பின்னா் மக்கள் அனைவரது வாழ்வில் வளமும், மகிழ்வும் நிறைந்திருக்க பிராா்த்திக்கப்பட்டது.

நிகழ்வில், சுந்தர்ராஜ் நகா் சுந்தர விநாயகா் கோயில் குருக்கள் ராஜ்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் அருள்தந்தை ஜான் பீட்டருக்கு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினா். அருட்தந்தை ஜான் பீட்டரும், இரு குருக்களையும் கெளரவித்தாா்.

ஓய்வு பெற்ற வட்டாட்சியா் சத்தியவாகீஸ்வரன், பேராசிரியா்கள் விஜயகுமாா், முகமது காசிம் வாழ்த்தினா்.

விழாவில் கிறிஸ்தவ, இந்து, இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த ஆண், பெண்கள் திரளாக பங்கேற்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com