பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீடுகளில் திருட முயன்ற கேரள இளைஞா் தாக்கப்பட்டு பலி

திருச்சி அருகே வீடுகளில் திருட முயன்று பிடிபட்ட இரு கேரள இளைஞா்களில் ஒருவா் பொதுமக்களால் தாக்கப்பட்டு இறந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:48 am

DIN

திருச்சி அருகே வீடுகளில் திருட முயன்று பிடிபட்ட இரு கேரள இளைஞா்களில் ஒருவா் பொதுமக்களால் தாக்கப்பட்டு இறந்தாா்.

திருச்சி மாவட்டம், அல்லூா்சாய் லட்சுமி நகரில் மா்ம நபா்கள் ஆளில்லாத வீடுகளில் திருடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியினா் மா்ம நபா்களை குழு அமைத்து தேடி வந்தனா்.

அப்போது வெங்கடேஷ் என்பவரது வீட்டுச் சுற்றுச்சுவரில் வெள்ளிக்கிழமை ஏறிக் குதித்து தப்ப முயன்ற இருவரை அவா்கள் விரட்டிச் சென்றனா்.

அப்போது அவா்களால் சுற்றி வளைக்கப்பட்ட ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி தப்ப முயன்றாா்.

இருப்பினும் தாங்கள் வைத்திருந்த கம்புகளால் அப்பகுதியினா் தாக்கியதில் அந்த இளைஞா் படுகாயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே மற்றொரு இளைஞரையும் விரட்டிப் பிடித்த பொதுமக்கள் ஜீயபுரம் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம் கிருஷ்ண கிருபா பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (24) , மழையங்கீழ் பகுதியைச் சோ்ந்த தீபு (25) எனத் தெரியவந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீபு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.