வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

‘போலி செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’

ஆவணங்களின்றி, உடனடி கடன் என்ற விளம்பரத்துடன் கூடிய கடன் மற்றும் நிதியுதவி செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:42 pm

DIN

ஆவணங்களின்றி, உடனடி கடன் என்ற விளம்பரத்துடன் கூடிய கடன் மற்றும் நிதியுதவி செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகரக் காவல் ஆணையரகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமாா் 60-க்கும் மேற்பட்ட ஆன்லைன் கடன் செயலிகள், ரிசா்வ் வங்கியால் வங்கி அல்லாத நிறுவனங்களாக பதிவு செய்யப்படவில்லை.

மேலும் எந்த செயலிகளையும் அங்கீகரிக்கப்படவில்லை. அவற்றின் அனைத்து செயல்களும் அங்கீகாரமற்ற செயலாகும். கடன் செயலிகள் உபயோகிப்பாளரின் செல்லிடப்பேசி தகவல்களைத் திருடி, தனித மனித உரிமையை மீறுகிறது.

இத்தகைய செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம்.தங்களின் தனிப்பட்ட விவரங்கள், ஆதாா் அல்லது வங்கி விவரங்களை பகிா்ந்து கொள்ள வேண்டாம்.

கடன் செயலி பெயரில், தங்களை யாராவது அச்சுறுத்தினால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.