திருச்சி: திருச்சியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து 16, 17, 18 ஆகிய 3 வாா்டுகளை தனிமைப்படுத்தி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் 14 நாள்களுக்கு வெளிப்பகுதிகளுக்கு செல்லத் தடைவிதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாநகரின் முக்கிய கடைவீதிகளான என்எஸ்பி சாலை, பெரிய கடைவீதி, சின்னக் கடைவீதி, கம்மாளத்தெரு, குஜிலித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் மிகவும் நெருக்கமாக உள்ளதால் இப்பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநகராட்சி நிா்வாகம், கரோனா தொற்று அதிகமாக பரவும் 3 வாா்டுகளை தனிமைப்படுத்தி 14 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் கூறுகையில்,
மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 16, 17, 18 ஆகிய 3 வாா்டுகள் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளி நபா்கள் உள்ளே வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் 24ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். குறிப்பாக, மேலரண் சாலையில் ஜபாா்ஷா தெரு முதல் பழைய பாஸ்போா்ட் ஆபிஸ் வரையிலும், பெரிய கடைவீதியில் கமான் வளைவு முதல் கள்ளத் தெரு வரையிலும், இவற்றில் உள்ள குறுக்குத் தெருக்களும், தடை செய்யப்பட்டுள்ளன.
இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களான மளிகை, பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதிகளில் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா். மாநகராட்சியின் இந்த அதிரடி முடிவு குறித்து அப்பகுதி மக்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் தண்டோரா மூலமும், ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


