திருச்சியில் 70% உணவகங்கள் செயல்படத் தொடங்கின

பொது முடக்கத்தால் தமிழகத்தில் மூடப்பட்ட உணவகங்கள் கடந்த மே மாதம் முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்காமல் பார்சல் மட்டுமே வழங்கும் வகையில் அனுமதிக்கப்பட்டது. 
திருச்சியில் 70% உணவகங்கள் செயல்படத் தொடங்கின
Updated on
1 min read

பொது முடக்கத்தால் தமிழகத்தில் மூடப்பட்ட உணவகங்கள் கடந்த மே மாதம் முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்காமல் பார்சல் மட்டுமே வழங்கும் வகையில் அனுமதிக்கப்பட்டது. 

ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் மேலும் சில தேர்வுகள் அறிவிக்கப்பட்டு புதிய வழிக்காட்டுதல்கள் படி ஜூன் 8 ஆம் தேதி முதல் செயல்படலாம் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

திங்கள்கிழமை அதிகாலையிலிருந்தே திருச்சி மாவட்டத்தில் உள்ள 70 சதவீத உணவகங்கள் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு படிப்படியாக திறக்கப்பட்டன. 

பெரும்பாலான கடைகளில் குறைவான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு சமூக இடைவெளியுடன் காலை உணவு பரிமாறப்பட்டது. அதேபோல முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

 முன்னதாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கிருமி திரவம் கொண்டு நன்கு கை கழுவ அறிவுறுத்தப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த 30 சதவீதம் உணவகங்கள் திறக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com