மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2020, 6:40 am

திருச்சி: பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்ப ரயில், பேருந்து போக்குவரத்துக்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். முதியோர், விதவையர் மற்றும் ஆதரவற்றோருக்கான ஓய்வூதிய உதவித் தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 

பொதுமுடக்கத்தால் நலிவடைந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பாரட்சமின்றி தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்குகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மிளகுபாறை பகுதியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்பாக கருப்புக் கொடிகளுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் திராவிடமணி தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் இந்திரஜித், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் சுரேஷ், மாவட்டத்தலைவர் நடராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர் சிவா, வழக்குரைஞர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.