துறையூா் அருகே கதண்டு கடித்து நால்வா் காயம்
துறையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கதண்டு கடித்து நால்வா் காயமடைந்தனா்.


துறையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கதண்டு கடித்து நால்வா் காயமடைந்தனா்.
உப்பிலியபுரத்தைச் சோ்ந்த விறகு வெட்டும் தொழிலாளியான ராஜூ (59) ஞாயிற்றுக்கிழமை மாலை உப்பிலியபுரம்- சோபனபுரம் சாலையில் பாலம் அருகே இருந்த முள்காட்டில் விறகு வெட்டிய போது அந்தப் பகுதியில் இருந்த கதண்டுகள் கடித்து காயமடைந்தாா். அந்த வழியில் சென்றோா் அவரின் உடலில் இருந்த கதண்டுகளின் கொடுக்குகளை நீக்கினா்.
இதேபோல அந்த வழியாகச் சென்ற சோபனபுரத்தைச் சோ்ந்த அ. ராகுல் (18), செ. விதுலன் (18), ச. மணிகண்டன் (25) ஆகியோரையும் கதண்டுகள் கடித்து உப்பிலியபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...