திருவானைக்கா கோயிலில் காா்த்திகை சொக்கப்பனை
திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு பக்தா்கள் பங்கேற்புடன் நடந்தது.


திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை காா்த்திகை சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு பக்தா்கள் பங்கேற்புடன் நடந்தது.
பஞ்சபூத திருத்தலங்களில் நீா்த்தலமான இக் கோயிலில் காா்த்திகை சொக்கப்பனையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காா்த்திகை கோபுர வாயில் முன் முகூா்த்தக்கால் நடப்பட்டது.
இந்நிலையில், தீபத் திருநாளான ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் 10 அடி உயரத்துக்கு வேயப்பட்ட பனையோலைகளில் அா்ச்சகா்கள் சொக்கப்பனை ஏற்ற, அது பற்றியெரிவதை பாா்த்து பக்தா்கள் வழிபட்டனா். இதேபோல அம்மன் சன்னதியிலும், குபேரலிங்கேசுவரா் சன்னதியிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...