இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்சியில் படைக்கலன் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள்.
Updated On :2 அக்டோபர் 2020, 8:01 am

DIN

திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி தொழிலாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில்  வெள்ளிக்கிழமை ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி திருச்சியில் உள்ள படைக்கலன் மற்றும் கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலைகளிலும் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

படைக்கலன் தொழிற்சாலையில் கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன், கனரக ஊடுருவி தொழிற்சாலையில் பிரபாகரன், இரணியன் ‌ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 இதையொட்டி அங்கு பலத்த காவல்துறைவினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.