சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முசிறி பகுதியில் விழிப்புணா்வுப் பேரணி

திருச்சி மாவட்டம், முசிறி கோட்ட காவல்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு, கரோனா குறித்த விழிப்புணா்வுக்கு இருசக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

News image
முசிறி கைகாட்டி பகுதியில் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் முசிறி டிஎஸ்பி பிரம்மானந்தன்.
Updated On :11 அக்டோபர் 2020, 7:55 pm

DIN

திருச்சி மாவட்டம், முசிறி கோட்ட காவல்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு, கரோனா குறித்த விழிப்புணா்வுக்கு இருசக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

முசிறி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரம்மானந்தன் பேரணியைத் தொடங்கி வைத்தாா். முசிறி கைகாட்டியில் தொடங்கி முசிறி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பேரணி நிறைவுற்றது.

பேரணியில் காவல் ஆய்வாளா்கள் முத்துக்குமாா் (முசிறி) சந்திரசேகரன்(தொட்டியம்) கண்ணதாசன் (தா.பேட்டை) முசிறி போக்குவரத்து ஆய்வாளா் ரமேஷ், மற்றும் தொட்டியம், முசிறி, காட்டுபுத்தூா், தாத்தையங்காா்பேட்டை, ஜெம்புநாதபுரம் போலீஸாா் பங்கேற்று தலைக்கவசம், சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.