இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்சி: திருடுபோன வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருடுபோன 77 வாகனங்களை மாநகர காவல்துறையினர் மீட்டு, அவற்றை உரியவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைந்தனர்.

News image
மீட்கப்பட்ட வாகனங்கள்.
Updated On :11 அக்டோபர் 2020, 11:23 am

DIN

திருடுபோன 77 வாகனங்களை மாநகர காவல்துறையினர் மீட்டு, அவற்றை உரியவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைந்தனர்.

திருச்சி மாநகர் கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் மேற்கொண்ட வாகன தணிக்கையில், சில தினங்களுக்கு முன்பு, திருத்துரைப்பூண்டி அருகேயுள்ள மேல மருதூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (51) என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அவர் கொடுத்த தகவலின் பேரில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் திருடுபோன 77 வாகன திருடி விற்பனை செய்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை மீட்ட காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், திருச்சி கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது உரியவர்களிடம் ஒப்படைத்தனர். 

நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் பங்கேற்று வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.