சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மறியல்: 110 பேர் கைது

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்.
Updated On :12 அக்டோபர் 2020, 6:26 am

DIN

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும். கரோனா பொதும் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு அறிவித்த ஸ்வான் நிதி ரூ.1000 அனைத்து வங்கிகளிலும் தங்கு தடையின்றி வியாபாரிகளை அலைகழிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. 

தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்குப் பகுதி செயலர் ஏ.அன்சர்தீன் தலைமை வகித்தார். முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி 30 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.