தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் மாணவர் அமைப்பினர் நூதனப் போராட்டம்

திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.

News image
திருச்சியில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர்.
Updated On :13 செப்டம்பர் 2020, 12:03 pm

DIN

திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் அமைப்பினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வினால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நீட் தேர்வை கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த மாணவர்கள் திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது தூக்கு கயிறை கழுத்தில் மாட்டிக்கொண்டு தற்கொலைசெய்து கொண்ட மாணவர்களின் படத்தை முகத்தில் ஒட்டிக்கொண்டும்,முக கவசத்தில் நீட்டை ரத்து செய் என்கிற வாசகத்தை எழுதியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் இஸ்மாயில் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.