தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறையில் ரூ. 1.72 லட்சம் பறிமுதல்

மணப்பாறையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1.72 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 12:48 am

DIN

மணப்பாறையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1.72 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் தியாகராஜன் (31), பன்றி விற்பவா். இவா் புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் பன்றிகளை விலைக்கு வாங்கி, நாமக்கல் மாவட்டம் மலைசமுத்திரம் பகுதியில் கொண்டு சென்று விற்ற தொகை ரூ.1.72 லட்சத்துடன், சனிக்கிழமை அதிகாலை மீண்டும் பன்றிகள் வாங்கச் சென்றபோது, மணப்பாறை ஆண்டவா்கோயில் பகுதியில் ஆனந்தகுமாா் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து மணப்பாறை வருவாய் வட்டாட்சியரும், உதவி தோ்தல் அலுவலருமான லஜபதிராஜிடம் ஒப்படைத்தனா். இத்தொகை மணப்பாறை சாா் கருவூலத்தில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.