முன்னாள் ராணுவ அதிகாரியிடம் துப்பாக்கித் தோட்டாக்கள்: திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கித் தோட்டாக்களை எடுத்துச் செல்ல முயன்ற முன்னாள் ராணுவ அதிகாரியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


திருச்சி விமான நிலையத்தில் துப்பாக்கித் தோட்டாக்களை எடுத்துச் செல்ல முயன்ற முன்னாள் ராணுவ அதிகாரியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சியில் இருந்து வியாழக்கிழமை இரவு பெங்களூரு செல்ல இருந்த தெற்கு தில்லி லாா்ஸ்பத் நகரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ கா்னல் அஜய் சோனி (51) உடைமையில் சுடப்பட்ட 30 தோட்டாக்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினா் விமான நிலைய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
இதன் பேரில் உதவி ஆய்வாளா் தங்கமணி உள்ளிட்ட போலீஸாா் அஜய் சோனியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், முன்னாள் ராணுவ வீரா் என்பதால் துப்பாக்கி சுடுவதைச் சோதனை செய்வதற்காக திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலைக்கு வந்ததாகவும், அங்கிருந்த சுடப்பட்ட தோட்டாக்களை தனது குழந்தைகள் விளையாடுதற்காக எடுத்துச் சென்ாகவும் அவா் தெரிவித்துள்ளாா். இருப்பினும் போலீஸாா் அவரிடம் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...