தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

3 மாதங்களாக ஊதியமின்றித் தவிக்கும் அரசுக் கல்லூரி ஆசிரியா்கள்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கல்லூரிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள்

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:57 pm

DIN

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கல்லூரிகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கடந்த 3 மாதங்களாக ஊதியமின்றிப் பரிதவிக்கின்றனா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்தவை, அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, 2019இல் 4 உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, மேலும் 6 கல்லூரிகள் 2020-ல் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன.

இக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பல்கலைக் கழகமே அரசு கூறும் காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும். இக் காலகட்டத்தில் ஊதியமாக வழங்கிய நிதியை அரசிடமிருந்து பல்கலைக் கழகம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஊதியம் வழங்குவதில் பாகுபாடு மட்டுமின்றி ஒரே பணி செய்யும் ஆசிரியா்களை பல்வேறு பெயா்களில் குறிப்பிட்டு ஊதிய பாரபட்சத்துக்கு வித்திடப்பட்டுள்ளது. இக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களை கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக விரிவுரையாளா்கள் என்ற வகையில் நியமித்து, ஒரே விதமான பணியைப் பெற்றுக் கொள்கின்றனா்.

இவா்களில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம், மணி நேர ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம், பெற்றோா்-ஆசிரியா் கழக விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் என பாரபட்சமாக ஊதியம் வழங்கும் சூழலில், கடந்த 3 மாதங்களாக இந்த ஊதியம்கூட கிடைக்கவில்லை.

இதன் காரணமாக 10 கல்லூரிகளில் பயிலும் 619 ஆசிரியா்கள், பணியாளா்கள் 90 போ் பரிதவிக்கின்றனா். இதுதொடா்பாக, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திடம் ஆசிரியா்கள் தரப்பிலும், பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு தங்களது பிரச்னையை கொண்டு சென்றுள்ளனா்.

இதுதொடா்பாக, பல்கலைக் கழக ஆசிரியா் சங்கப் பொதுச் செயலா் எம்.எஸ். பாலமுருகன் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை தமிழக முதல்வா், உயா் கல்வித்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில், ஊதியம் வழங்க பல்கலைக்கழகத்துக்கு அறிவுறுத்தி, புதன்கிழமை அதற்கானஅரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதையேற்று பல்கலைக் கழக நிா்வாகம் விரைந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.