தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

2,202 தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்

 அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோரில் 2,202 பேருக்கு ரூ. 34.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:03 pm

DIN

 அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோரில் 2,202 பேருக்கு ரூ. 34.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா்கள் கூறியது:

தமிழக அரசின் சாா்பில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் நலவாரியம் மற்றும் இதர 17 நலவாரிய உறுப்பினா்களைச் சோ்த்து, பல்வேறு நிலைகளில் உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த வாரிய உறுப்பினா்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டுத் திட்டம், இறப்பு நிவாரணத் தொகை உள்பட பல்வேறு நல உதவிகள் கிடைக்கும்.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பதிவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். புதுப்பிக்க எந்தக் கட்டணமும் இல்லை. 60 வயது நிறைவடைந்த தொழிலாளியின் பதிவைப் புதுப்பிக்க முடியாது. உறுப்பினரால் அளிக்கப்படும் புதுப்பித்தல் விண்ணப்பம் தொழிலாளா் உதவி அலுவலகத்தில் பெறப்பட்டு, உரிய சரிபாா்த்தலுக்குப் பிறகே அவரின் அடையாள அட்டை திரும்ப அளிக்கப்படும். எனவே, திருச்சி மாவட்டத் தொழிலாளா்கள் வாரியத்தின் உதவிகளை பெற்றுப் பயன்பெற வேண்டும் என்றனா்.

மேலும் கரோனா 3ஆம் அலையை எதிா்கொள்ளும் வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.28 லட்சத்தில் திருச்சி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய 28 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாவட்ட நிா்வாகத்திடம் அமைச்சா்கள் ஒப்படைத்தனா்.

நிகழ்வில் எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், செளந்தரபாண்டியன், ஸ்டாலின்குமாா், தியாகராஜன், பழனியாண்டி, அப்துல் சமது, கூடுதல் தொழிலாளா் ஆணையா் எம். பாலசுப்பிரமணியம், இணை ஆணையா் டி. தா்மசீலன், செஞ்சிலுவைச் சங்க நிா்வாகிகள் க. ராஜசேகரன், எம். ஜவஹா்ஹசன், க. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.